மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி யுனெஸ்கோ கட்டிடத்தின் முன்பு திருவள்ளுவர் சிலையை நிறுவ வேண்டும் என மொர்சியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள விஐடி(VIT UNIVERSITY) பல்கலைக்கழகத்தில் திருவள்ளூவர் விழா கொண்டாடும் வகையில் மாநில அளவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு, சான்றை சிறப்பு அழைப்பாளராக விழாவில் கலந்துக்கொண்ட மொரிசியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன்(Arumugam Parasuraman) வழங்கினார்.
பின்னர் விழா மேடையில் விஐடி வேந்தர் விஸ்வநாதன் பேசியதாவது:- “மக்களுக்கு தமிழர் என்ற உணர்வு வரவேண்டும். அவ்வாறு வரவேண்டும் என்றால் முதலில் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள். பின்னர் உலகம் முழுவதும் தமிழை பரப்புங்கள்" என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மொரிசியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன், “திருவள்ளூவரின் திருக்குறள் தமிழ் மட்டுமில்லாமல் உலகம் போற்றும் நூலாகும். இந்திய அரசு உடனடியாக பாராளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி யுனெஸ்கோ அமைப்பின் கட்டிடம் முன்பு, திருவள்ளூவர் சிலை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், யுனெஸ்கோ மூலம் திருவள்ளூவரின் பெயரில் விருது வழங்க நடவடிக்கை எடுத்தால் அது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும்” என்று கூறினார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள விஐடி(VIT UNIVERSITY) பல்கலைக்கழகத்தில் திருவள்ளூவர் விழா கொண்டாடும் வகையில் மாநில அளவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு, சான்றை சிறப்பு அழைப்பாளராக விழாவில் கலந்துக்கொண்ட மொரிசியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன்(Arumugam Parasuraman) வழங்கினார்.
பின்னர் விழா மேடையில் விஐடி வேந்தர் விஸ்வநாதன் பேசியதாவது:- “மக்களுக்கு தமிழர் என்ற உணர்வு வரவேண்டும். அவ்வாறு வரவேண்டும் என்றால் முதலில் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள். பின்னர் உலகம் முழுவதும் தமிழை பரப்புங்கள்" என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மொரிசியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன், “திருவள்ளூவரின் திருக்குறள் தமிழ் மட்டுமில்லாமல் உலகம் போற்றும் நூலாகும். இந்திய அரசு உடனடியாக பாராளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி யுனெஸ்கோ அமைப்பின் கட்டிடம் முன்பு, திருவள்ளூவர் சிலை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், யுனெஸ்கோ மூலம் திருவள்ளூவரின் பெயரில் விருது வழங்க நடவடிக்கை எடுத்தால் அது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும்” என்று கூறினார்.